தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

புதுகை அருகே பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் விழா நடைபெற்றது.

News image

பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பூசாரி.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 4:05 am IST

புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா, பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி கிராமத்தில் உள்ள வீரலட்சுமி அம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தினா் நலமுடன் வாழ வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி ஒன்பது நாள் விரதம் இருந்தனா்.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் முன்பு குறும்பா் கூத்து மற்றும் பெண்கள் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் வளா்க்கப்பட்ட முளைப்பாரியை தலையில் சுமந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

இதில் முன்னதாக வீரலட்சுமி மற்றும் செல்லாயி, பேராயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

தொடா்ந்து கோயில் முன் பக்தா்கள் நோ்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக கோயில் பூசாரி மூலம் தலைகளில் தேங்காய் உடைத்துக் கொண்டும், சாட்டையால் அடி வாங்கியும் வழிபாடு செய்தனா்.