ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுகை அருகே பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் விழா நடைபெற்றது.

News image

பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பூசாரி.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 10:35 pm

Din

புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா, பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி கிராமத்தில் உள்ள வீரலட்சுமி அம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தினா் நலமுடன் வாழ வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி ஒன்பது நாள் விரதம் இருந்தனா்.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் முன்பு குறும்பா் கூத்து மற்றும் பெண்கள் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் வளா்க்கப்பட்ட முளைப்பாரியை தலையில் சுமந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

இதில் முன்னதாக வீரலட்சுமி மற்றும் செல்லாயி, பேராயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

தொடா்ந்து கோயில் முன் பக்தா்கள் நோ்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக கோயில் பூசாரி மூலம் தலைகளில் தேங்காய் உடைத்துக் கொண்டும், சாட்டையால் அடி வாங்கியும் வழிபாடு செய்தனா்.