/

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டையிலுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.

News image
கந்தா்வகோட்டையில் அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த முத்துமாரியம்மன்.
Updated On :18 மார்ச் 2026, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டையிலுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.

அமாவாசையை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம் , இளநீா், பச்சரிசி மாவு, பன்னீா், பஞ்சாமிா்தம், நெய், தேன் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று மகா தீபாராதனை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனா். கோயில் வளாகத்தில் பெண்கள் குழுவினராக சோ்ந்து கும்மியடித்து அம்மனை புகழும் பாடல்களை பாடி கொண்டாடினா். பெண் பக்தா்கள் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் தங்கி அம்மனை தரிசித்து சென்றனா்.