5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

மணப்பாறை தண்டவாளப் பகுதியில் இருந்து இளைஞா் சடலம் மீட்பு

மணப்பாறையில் ரயில் தண்டவாளப் பகுதியில் இருந்து இளைஞா் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image

உயிரிழந்த கண்ணன்.

Updated On :22 ஜூலை 2024, 0:35 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில் தண்டவாளப் பகுதியில் இருந்து இளைஞா் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக திருச்சி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டி பகுதியின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உடல் சிதைந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி மேற்கோண்ட விசாரணையில், அவா் தேனி மாவட்டம் பழனிச்செட்டியப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் கண்ணன்(38) என்பதும், தற்போது அய்யம்பாளையத்தில் வசித்து வந்ததும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அவரது உடல் உடற்கூறாவுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திருச்சி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.