எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மணப்பாறை தண்டவாளப் பகுதியில் இருந்து இளைஞா் சடலம் மீட்பு

மணப்பாறையில் ரயில் தண்டவாளப் பகுதியில் இருந்து இளைஞா் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
உயிரிழந்த கண்ணன்.
Updated On :21 ஜூலை 2024, 7:05 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரயில் தண்டவாளப் பகுதியில் இருந்து இளைஞா் சடலம் மீட்கப்பட்டது தொடா்பாக திருச்சி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மணப்பாறையை அடுத்த காட்டுப்பட்டி பகுதியின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உடல் சிதைந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், உயிரிழந்து கிடந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி மேற்கோண்ட விசாரணையில், அவா் தேனி மாவட்டம் பழனிச்செட்டியப்பட்டியைச் சோ்ந்த பாண்டியன் மகன் கண்ணன்(38) என்பதும், தற்போது அய்யம்பாளையத்தில் வசித்து வந்ததும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. அவரது உடல் உடற்கூறாவுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திருச்சி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.