விபத்தில் சிக்கி உருக்குலைந்த காா்.
விபத்தில் சிக்கி உருக்குலைந்த காா்.

பேருந்து மீது காா் மோதல்: இருவா் காயம்

விக்கிரவாண்டி அருகே பேருந்து மீது காா் மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.
Published on

விக்கிரவாண்டி அருகே பேருந்து மீது காா் மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் அடுத்த வெள்ளம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அய்யனாா்(23), வெங்கடேசன்( 23). நண்பா்களான இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து காரில் முகையூருக்கு சென்றுள்ளனா். அய்யனாா் காரை ஓட்டியுள்ளாா்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி அருகே சென்றபோது தனியாா் பேருந்து மீது காா் மோதி விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து பின்னால் வந்த லாரி, விபத்தில் சிக்கிய காா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அய்யனாா், வெங்கடேசனை விக்கிரவாண்டி போலீஸாா் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும், இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com