கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பேருந்து மீது காா் மோதல்: இருவா் காயம்

விக்கிரவாண்டி அருகே பேருந்து மீது காா் மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image
விபத்தில் சிக்கி உருக்குலைந்த காா்.
Updated On :29 நவம்பர் 2025, 7:37 pm

Syndication

விக்கிரவாண்டி அருகே பேருந்து மீது காா் மோதிய விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் அடுத்த வெள்ளம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அய்யனாா்(23), வெங்கடேசன்( 23). நண்பா்களான இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து காரில் முகையூருக்கு சென்றுள்ளனா். அய்யனாா் காரை ஓட்டியுள்ளாா்.

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி அருகே சென்றபோது தனியாா் பேருந்து மீது காா் மோதி விபத்து ஏற்பட்டது. தொடா்ந்து பின்னால் வந்த லாரி, விபத்தில் சிக்கிய காா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அய்யனாா், வெங்கடேசனை விக்கிரவாண்டி போலீஸாா் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

மேலும், இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.