தேவையான பொருள்கள்:
துவரை- 100 கிராம்
தேங்காய்த் துருவல்- அரை கிண்ணம்
வெல்லம்- 2 அச்சு
ஏலக்காய்- 4
உப்பு- அரை சிட்டிகை
செய்முறை:
துவரையை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து எண்ணெய்விடாமல் வறுத்துகொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் தேவையான தண்ணீரைவிட்டு துவரையை போட்டு உப்பை போட்டு, வேக வைக்க வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி தண்ணீரைவிட்டு வெல்லத்தைப் போட்டு, வெல்லம் கரைந்தவுடன் துவரை, தேங்காய்த் துருவலைப் போட்டு ஏலப் பொடியையும் நன்றாகக் கிளறி சுண்டல் சேர்த்து வரும் வரை கிளறி இறக்க வேண்டும். பாகை முற்றி விடாமல் செய்ய வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.