பயணிகளுக்கான பேருந்து அட்டைக் கட்டணம் உயர்வு
பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம், பயணிகளுக்கான தின மற்றும் மாதாந்திர பேருந்து அட்டைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகம், பயணிகளுக்கான தின மற்றும் மாதாந்திர பேருந்து அட்டைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
அக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசு, அதிக அளவில் டீசலை கொள்முதல் செய்வோருக்கு, வெளிச் சந்தை விலையை விட, ஒரு லிட்டருக்கு ரூ.12 கூடுதலாக வசூலி்க்கிறது. இதனால், பெங்களூர் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, ஆண்டுக்கு ரூ.50 கோடி வரை கூடுதல் செலவாகிறது. கூடுதல் செலவை குறைக்கும் விதமாக, வெளிச்சந்தையில், டீசல் வாங்குவது, நிர்வாகத்திற்கு கூடுதல் பளுவையும், நடைமுறை சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது. அதனால், கூடுதல் செலவை ஈடு செய்யும் விதமாக, பயணிகளுக்கான தின மற்றும் மாதாந்திர பேருந்து அட்டை கட்டணத்தை உயர்த்த, நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடையாள அட்டையுடன், தின அட்டை பெற ரூ.55 ஆகவும், அடையாள அட்டை இன்றி, தின அட்டை பெற ரூ.60 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாத அட்டை பெற, கறுப்பு பலகை உள்ள பேருந்துகளில் பயணிக்க ரூ.725 ஆகவும், சிவப்பு பலகை உள்ள பேருந்துகளில் பயணிக்க ரூ.925 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள், கறுப்பு பலகை உள்ள பேருந்தில் பயணிக்க, மாத அட்டை பெறுவதற்கான கட்டணம் ரூ.650 ஆகவும், சிவப்பு பலகை உள்ள பேருந்தில் பயணிப்பதற்கான மாத அட்டை பெற ரூ.830 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தின அட்டைக்கான கட்டண உயர்வு, மே 11-ம் தேதி முதலும், மாத அட்டைக்கான கட்டண உயர்வு, ஜூன் 1-ம் தேதி முதலும் அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.