பெங்களூரு

கொலை வழக்கில் 4 பேர் கைது

ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை வழக்கில் அவரது உறவினர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்

DIN

ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை வழக்கில் அவரது உறவினர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு கொத்தனூரைச் சேர்ந்தவர் ஜெயராம் (48). குடிநீர் சுத்திகரிப்பு மையம் மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவரை புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த கொத்தனூர் போலீஸார், ஜெயராமின் உறவினரான ராஜேஷ் கெளடா, நவீன்குமார், மோகன், ராஜு ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் சொத்து தகராறில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் கெளடாவின் தாயை ஜெயராம் கொலை செய்தாராம். இதற்கு பழிவாங்கும் நோக்கில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை ராஜேஷ் கெளடா கொலை செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT