பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை 10கே மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெறுவதையொட்டி, சில சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள செய்தி: பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) 10கே மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற உள்ளது. எனவே, காலை 5.30 மணி முதல் 9.35 மணி வரை கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கஸ்தூரிபா சாலை, எம்.ஜி.சாலை, மியூசியம் சாலை, ஆசீர்வாதம் சாலை, எச்.பி.ஐ. சதுக்கம், டிக்கன்சன் சாலை, கப்பன் சாலை, சென்ட்ரல் சாலை, குயின்ஸ் சாலை, அம்பேத்கர் சாலை, கப்பன் பூங்கா ஆகிய பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜே.சி. சாலை, நிருபதுங்கா சாலை, சிவாஜி நகர், பாலேகுந்தி சதுக்கம், எம்.ஜி. சாலை, செயின்ட்மார்க்ஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள் போக்குவரத்து போலீஸாரின் வழிகாட்டுதலின்படி மாற்றுப் பாதையில் சென்று ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.