பெங்களூரு

மகதாயி நதிநீர் திட்டம் கோரி கோவா சட்டப் பேரவை முற்றுகை: வாட்டாள்நாகராஜ் அறிவிப்பு

DIN

மகதாயி நதிநீர் திட்டத்தை அமல்படுத்தக் கோரி,  கோவா மாநில சட்டப் பேரவையை முற்றுகையிட முடிவு செய்துள்ளதாக கன்னட சளுவளி கட்சியின் தலைவர் வாட்டாள்நாகராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
மகதாயி நதிநீர் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து,  பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கியுள்ள குளிர்காலக் கூட்டத் தொடரில்  கர்நாடக அரசு உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும்.  மறுக்கும்பட்சத்தில் கர்நாடக அரசு மட்டுமின்றி கோவா அரசையும் கண்டித்து,  டிசம்பர்  9-ஆம் தேதி கோவா சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
மகதாயி நதிநீர் திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன. வடகர்நாடகத்தின் வளர்ச்சியில் மாநில அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT