பெங்களூரு

லாரி மீது பயணிகள் வேன் மோதல்: 3 பேர் பலி

DIN

மைசூரு அருகே லாரி மீது பயணிகள் வேன் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
தென்கன்னட மாவட்டம், மங்களூரு தொக்கொட்டியைச் சேர்ந்தவர் ஹமீது (45). இவரது மகன் ஷேக் ஹக்கீப் (11). உறவினர் முகமது இக்பால் (43) உள்பட 17 பேர் திங்கள்கிழமை இரவு பயணிகள் வேனில் உதகைக்கு சுற்றுலாச் சென்று கொண்டிருந்தனராம்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் மைசூரு மாவட்டம், ஹுன்சூர் கலகட்டி அருகே எதிரே சென்ற லாரி மீது வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஹமீது, ஷேக் ஹக்கீப், முகமது இக்பால் ஆகியோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். இதுகுறித்து பிலிகெரே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT