முகப்பு
பெங்களூரு

தீ விபத்து: 3 பேர் பலி

சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் விகாஸ் பிரதான் (27). இவரது மனைவி கர்னா (24). இவர்களது உறவினர் தேவன் (23), சவாண் ஆகிய 4 பேரும் வேலை நிமித்தமாக பெங்களூரு ஹெப்பகோடி திருபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நவ.10-ஆம் தேதி  காலை வீட்டில் கர்னா  சமையல் செய்து கொண்டிருந்தாராம். அப்போது, சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் தீக்காயமடைந்த விகாஸ், கர்னா, தேவன் ஆகிய மூவரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
சவாணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஹெப்பகோடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    

முழு கட்டுரையைப் படிக்க →