பெங்களூரில் மழை வெள்ளத்தில் ஆட்டோவுடன் அடுத்துச் செல்லப்பட்ட ஓட்டுநரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு பனசங்கரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ், தனது வாகனத்துடன் செவ்வாய்க்கிழமை இரவு கனகபுரா பிரதான சாலையில் உள்ள கன்டகதொட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவில் விஜய் என்பவரும் அமர்ந்திருந்தார்.
பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆட்டோ அடித்துச் செல்லப்பட்டது. இதில் ஆட்டோவிலிருந்த விஜய், அங்கிருந்த மரக் கிளையைப் பிடித்து மரத்தில் ஏறிக் கொண்டார். ஆனால், ஓட்டுநர் சந்தோஷ் கால்வாய் நீரில் ஆட்டோவுடன் இழுத்துச் செல்லப்பட்டார்.
கக்லிபுரா போலீஸார், தீயணைப்பு, பேரிடர் மீட்புப் படையினர் கால்வாயில் இழுத்துச் செல்லப்பட்ட சந்தோஷை தேடி வருகின்றனர்.