முகப்பு
பெங்களூரு

ஆசிரியைகளிடம் மோசடி:  ஒருவர் கைது

பள்ளி ஆசிரியைகளிடம் மோசடியில் ஈடுபட்டதாக,  ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 7:51 AM
பகிர்:

பள்ளி ஆசிரியைகளிடம் மோசடியில் ஈடுபட்டதாக,  ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு கே.ஜி.ஹள்ளியைச் சேர்ந்தவர் அப்துல்காதர் (59).  இவர் பள்ளிகளுக்குச் சென்று தன்னை தொழிலதிபர் என்றும்  பள்ளியின் பழைய மாணவர் என்றும் கூறிக் கொண்டு,  ஆசிரியைகளுக்கு  பரிசுகளை அளித்து நன்கு பழக்கப்படுத்திக் கொள்வாராம். 
இதையடுத்து,   ஆசிரியைகளிடம் அவர்கள் அணிந்துள்ள தங்க நகைகளின் வடிவமைப்பு நன்றாக உள்ளதாகக் கூறி, அதைப் போலவே டிசைன் செய்ய வேண்டும் என தெரிவித்து,  நகைகளை வாங்கிச் சென்று திரும்பத் தராமல் மோசடி செய்து வந்தாராம். 
புகாரின்பேரில் ஆர்.டி.நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, அப்துல்காதரை கைது செய்தனர். அவரிடமிருந்து 60 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.