திருப்பதியில் 3 மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து!
விஐபி தரிசனம் ரத்து செய்வது பற்றி..
திருமலை திருப்பதியில் மூன்று மாதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கோடைக்காலம் துவங்கியுள்ளதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குப் படையெடுத்து வருகின்றனர்.
ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதால், 24 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கோடைக்காலம் முடியும் வரை, மூன்று மாதங்களுக்கு விஐபி தரிசனம் செய்யப்படுவதாகவும், அதோடு திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன் வழங்குவதையும் ரத்து செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கோடைக்காலம் முடியும் வரை விஐபி தரிசனமும், சர்வ தரிசனமும் ரத்து செய்யப்படுவதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.