முகப்பு
பெங்களூரு

சட்டப் பேரவை கூட்டங்களில்  பங்கேற்பது கட்டாயம்: காங்கிரஸ் அமைச்சர்களுக்கு துணை முதல்வர் கடிதம்

கர்நாடக சட்டப் பேரவை கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் அமைச்சர்களுக்கு துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:29 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கர்நாடக சட்டப் பேரவை கூட்டங்களில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று காங்கிரஸ் அமைச்சர்களுக்கு துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதுதொடர்பான கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
காங்கிரஸ்-  மஜத கூட்டணி அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.  துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும் நடக்கிறது.
இந்த நிலையில்,  சில அமைச்சர்கள் அவைக்கு வருகைதராமல் இருப்பது குறித்து பேரவை,  மேலவைத்தலைவர்கள் வெளிப்படையாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 
அவையில் காங்கிரஸ் அமைச்சர்கள் தீவிரமாகப் பங்காற்றி, , செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விரும்புகிறது.
அவையில் உறுப்பினர்கள் வெளிப்படுத்தும் விவகாரங்கள்,  தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்கள்,  உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முழுமையானபதில்களை வழங்க வேண்டும்.  மேலும் பேரவை,  மேலவையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தால், கண்டிப்பாக கலந்துகொண்டு அவையின் விவாதத்தில் முழுமையாக பங்கேற்க வேண்டும். 
இதற்காக அவையில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும்  என்று பரமேஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.