விவேக்நகர் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம்
வாரிசுதாரர்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் விவேக் நகர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) காலை 11 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
வாரிசுதாரர்கள் இல்லாத இருசக்கர வாகனங்கள் விவேக் நகர் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 9) காலை 11 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரர்கள் இல்லாத இரு சக்கர வாகனங்கள் ஜூலை 9-இல் ஏலம் விடப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 080 25717100 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.