2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விஜயபுரா மாவட்டம், இன்டி சதாபுராவைச் சேர்ந்தவர் லட்சுமி பூதியாளா (36). இவரது குழந்தைகள் தனம்மா (7), பீரப்பா (3), அங்குஷ் (2). செவ்வாய்க்கிழமை அதிகாலை குடும்ப பிரச்னை காரணமாக இன்டி ரயில் நிலையத்துக்கு வந்த லட்சுமி, அங்கு வேகமாகச் சென்ற ரயில் முன் தனது குழந்தைகளுடன் பாய்ந்தார்.
பலத்த காயமடைந்த லட்சுமி பூதியாளா, அவரது குழந்தைகள் பீரப்பா, அங்குஷ் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். காயமடைந்த தனம்மா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து இன்டி ஊரக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.