பெங்களூரு

செவிலியர் பட்டயப் படிப்பு சேர்க்கை: செப்.18-இல் சான்றிதழ் சரிபார்ப்பு

DIN

செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணியாளர் பட்டயப் படிப்புக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செப்.18-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தில் உள்ள மாநில அரசு மற்றும் தன்னாட்சி உரிமம் பெற்ற மருத்துவக் கல்வியகங்களில் செவிலியர் மற்றும் பேறுகால மருத்துவப் பட்டயப் படிப்பில் சேர்ந்து படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டிருந்தன. இதற்கு பெரும்பாலானோர் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். 
சேர்க்கைக்கு ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் கர்நாடக தேர்வு ஆணையத்தின்   ‌w‌w‌w.‌k‌e​a.‌k​a‌r.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களின் அசல் சான்றிதழ்களை சரிபார்பதற்காக செப்.18-ஆம் தேதி தேர்வு ஆணைய தலைமை அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. 
இந்த முகாமில் பொதுப்பிரிவு, இடஒதுக்கீட்டு பிரிவினர், சிறப்புப்பிரிவினர் உள்ளிட்ட அனைத்துவகையான விண்ணப்பதாரர்களும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
மேலும் விவரங்களுக்கு  080-23564583,23361786 என்ற தொலைபேசி எண்ணிலோ  ‌k‌e​a​a‌u‌t‌h‌o‌r‌i‌t‌y-‌k​a@‌n‌i​c.‌i‌n என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT