கஞ்சா விற்பனை செய்ததாக, 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடரமணா (35), பெங்களூரு ஒயிட்பீல்டில் கஞ்சா விற்பனை செய்து வந்தாராம்.
தகவலின்பேரில் போலீஸார், வெங்கடரமணாவைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
மற்றொரு சம்பவம்: பெங்களூரு அல்சூரைச் சேர்ந்த ரிஹான் (35), கோலார் மாவட்டத்துக்குள்பட்ட சிந்தாமணியைச் சேர்ந்த நாராயணசாமி(48) ஆகிய இருவரும் மகாதேவபுரா ஜி.நாராயணபுராவில் கஞ்சா விற்பனை செய்து வந்தனராம்.
தகவலின்பேரில் போலீஸார் அங்கு சென்று, 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.