பெஸ்காம் வாடிக்கையாளர் கலந்தாய்வுக் கூட்டம் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம்(பெஸ்காம்)வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனத்தின்(பெஸ்காம்)அனைத்து துணை மண்டல அலுவலகங்களிலும் வாடிக்கையாளர் கலந்தாய்வுக் கூட்டம் மாதந்தோறும் 3-ஆவது சனிக்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆக. 17-ஆம் தேதி மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெஸ்காம் வாடிக்கையாளர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இக் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு, அதிகாரிகளுடன் நேருக்கு நேராக மின்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துக்கூறி நிவாரணம் பெறலாம். இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.