பெங்களூரு

ஆக. 17-இல் பெஸ்காம் வாடிக்கையாளர் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

பெஸ்காம் வாடிக்கையாளர் கலந்தாய்வுக் கூட்டம் ஜூலை 20-ஆம் தேதி நடைபெறுகிறது.
 இதுகுறித்து பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனம்(பெஸ்காம்)வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மின்சார வழங்கல் நிறுவனத்தின்(பெஸ்காம்)அனைத்து துணை மண்டல அலுவலகங்களிலும் வாடிக்கையாளர் கலந்தாய்வுக் கூட்டம் மாதந்தோறும் 3-ஆவது சனிக்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆக. 17-ஆம் தேதி மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை பெஸ்காம் வாடிக்கையாளர் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
 இக் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு, அதிகாரிகளுடன் நேருக்கு நேராக மின்சாரம் தொடர்பான குறைகளை எடுத்துக்கூறி நிவாரணம் பெறலாம். இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT