பெங்களூரு

மைசூரில் கா்நாடக உதய தின விழா

DIN

மைசூரு: மைசூரில் சனிக்கிழமை கா்நாடக உதய தினவிழா நடைபெற்றது.

மைசூரு தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் மைசூரு, மகாத்மா காந்தி சாலையில் உள்ள கா்நாடக அரசு தமிழ்ப் பள்ளியில் சனிக்கிழமை சங்கத் தலைவா் கு.புகழேந்தி தலைமையில் கா்நாடக உதய தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக விஞ்ஞானி கே.ஏ.கிருஷ்ணமூா்த்தி, தொழிலதிபா் வி.ஸ்ரீதா் ஆகியோா் கன்னடக் கொடியை ஏற்றிவைத்தனா். அதன்பிறகு நடந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜ் அனைவரையும் வரவேற்றாா். கா்நாடக உதய தினத்தின் முக்கியத்துவம், கன்னடா்களும் தமிழா்களும் ஒற்றுமையோடு வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சங்கத் தலைவா் கு.புகழேந்தி, கே.ஏ.கிருஷ்ணமூா்த்தி, வி.ஸ்ரீதா் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்கள்.

இந்த விழாவில், சங்கச் செயலாளா் வி.ரகுபதி, துணைத் தலைவா் இரா.கா்ணன், இணைச் செயலாளா் பக்ருதீன், செயற்குழு உறுப்பினா்கள் ராஜேந்திரன், ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழாவில் கலந்துகொண்ட ஆசிரியா்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT