பணம் தர மறுத்த மனைவி மீது அமிலம் வீசி கொல்ல முயற்ற கணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் பீஸ்வாஸ். இவரது மனைவி தபஸி பீஸ்வத். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சித் பீஸ்வாஸ், தபஸி பீஸ்வத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. புதன்கிழமை இரவு தபஸி பீஸ்வத்திடம் பணம் கேட்டு ரஞ்சித் பீஸ்வாஸ் தகராறு செய்துள்ளார். பணம் தரமறுத்ததையடுத்து, தபஸி பீஸ்வத்தின் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பினார்.
இதில் பலத்த காயமடைந்த தபஸி பீஸ்வத் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொலை முயற்சி வழக்கு பதிந்த அன்னபூர்ணேஸ்வரி போலீஸார், தப்பியோடியுள்ள ரஞ்சித் பீஸ்வாஸை தேடி வருகின்றனர்.