பெங்களூரு

ஆவணங்களின்றி பேருந்தில் கொண்டு சென்ற வெள்ளி விளக்குகள் பறிமுதல்

DIN

கர்நாடக அரசுப் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி  கொண்டு சென்ற ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 699 வெள்ளி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை இரவு விஜயவாடா சென்ற கர்நாடக அரசுப் பேருந்தில் வெள்ளி
விளக்குகள் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்வதாக மண்டல கட்டுப்பாட்டளருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து ஹொசகோட்டை அருகே சென்ற கொண்டிருந்த பேருந்தை அதிகாரிகள் அடங்கிய குழு நிறுத்தி பரிசோதனை செய்தனர். 
அப்போது பேருந்து 4 மூட்டைகளில் இருந்த 699 வெள்ளி விளக்குகளை பறிமுதல் செய்துள்ளனர். சுமார் 41 கிலோ எடையுள்ள இந்த விளக்குகளில் மதிப்பு ரூ. 15 லட்சமாகும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தி, நடத்துனர் நாராயணப்பா ஆகியோரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT