பெங்களூரு

மார்ச் 28-இல் அஞ்சல் சேவை குறைதீர் முகாம்

DIN


பெங்களூரில் மார்ச் 28-ஆம் தேதி அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடக அஞ்சல் வட்டத்தின் சார்பில் பெங்களூரு, அரண்மனை சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அதிகாரி, கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலக மாநாட்டு அரங்கில் மார்ச் 28-ஆம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் அஞ்சல் சேவை குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. பெங்களூரு மண்டலத்தைச் சேர்ந்த அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் ஏதாவது இருந்தால், அவற்றை உதவி இயக்குநர் (அஞ்சல் இயக்கம்), தலைமை அஞ்சல் அதிகாரி, கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு மார்ச் 25-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
புகார்களை ற்ங்ஸ்ரீட்.ந்ஹழ்க்ஷஞ்ஃண்ய்க்ண்ஹல்ர்ள்ற்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். புகார்களுடன் ஆதாரங்களை இணைப்பது நல்லது. மேலும், புகார் கடிதத்தில் தெளிவான தொடர்பு முகவரியை குறிப்பிடவும். மேலும் விவரங்களுக்கு 080-22392631, 22392543 என்ற தொலைபேசி எண்களை அணுகலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT