பெங்களூரு

சாலை விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் பலி

DIN

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மாநகரப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
சிக்பள்ளாபூரு மாவட்டம், மத்தேரெட்டிஹள்ளியைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் பெங்களூரு மாநகரப் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை அதிகாலை பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். குடிபன்டே வட்டம், மஞ்சனபெலே மேம்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை 7-இல் எதிரே சென்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த நாகேஷ் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து சிக்பள்ளாபூரு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT