பெங்களூரு

வருமான வரித் துறை சோதனையில் பாரபட்சம்

வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவதில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

DIN

வருமான வரித் துறையினர் சோதனை நடத்துவதில் பாரபட்சம் காட்டுகின்றனர் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஹுப்பள்ளியில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில்,  சின்சோளி, குந்தகோலா சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 
பாஜகவைச் சேர்ந்தவர்களோ அல்லது அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தங்கியுள்ள ஹோட்டல்களில்  வருமான வரித் துறையின் சோதனை நடத்துவதில்லை.  தேசிய அளவில் வருமான வரித் துறையினர் ஒருதலைபட்சமாக பணியாற்றி வருகின்றனர்.
மஜத மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத்தின் விமர்சனத்துக்கு எதுவும் கூற விரும்பவில்லை. இடைத்தேர்தலுக்குப் பிறகு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும்.  மக்கள் அன்பு வைத்திருப்பதால், நான் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கூறுவதில் தவறேதுமில்லை. அன்பால் அவர்கள் கூறுவதை தவறாக யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார் சித்தராமையா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT