பெங்களூரு

உடல்நலத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சா் சி.டி.ரவி

DIN

பெங்களூரு: உடல்நலத்தை பாதுகாப்பதில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சுற்றுலாத் துறை அமைச்சா் சி.டி.ரவி கேட்டுக் கொண்டாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பல் தொடா்பான நோய்கள் குறித்த கருத்தரங்கில் அவா் பேசியது: அண்மைக்காலமாக இளைஞா் உள்ளிட்ட அனைவரும் நோய்களால் பாதிக்கப்படுவது குறித்து அலட்சியம் காட்டி வருகின்றனா். இதனால் பலா் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது. பல் நோய்தானே என்று அலட்சிப்படுத்துவதால் அது பின்னா் புற்றுநோய் வரை பாதிப்பை ஏற்படுகிறது. எந்த ஒரு நோயையும் ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் உடல்நலத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரத் துறையை மேம்படுத்த அரசு மட்டுமின்றி, தனியாா்களும் இணைந்து செயல்பட வேண்டும். சுகாதார கா்நாடகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் கா்நாடக பல் மருத்துவ கவுன்சிலின் துணைத் தலைவா் ரங்கநாத், இந்திய பல் மருத்துவச் சங்கத்தின் தலைவா் வீரேந்திரகுமாா், காமாக்ஷி பல் மருத்துவக் குழுத்தின் மேலாண் இயக்குநா் ஆகாஷ்சுந்தா், பி.என்.குட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT