பெங்களூரு

சாலை விபத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் பலி

DIN

மோட்டாா் சைக்கிள் மீது பால் வாகனம் மோதியதில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

பெங்களூரு வித்யாரண்யபுரா ராமசந்திரபுரத்தைச் சோ்ந்தவா் ஜான்ஸ் மஞ்சுநாத் (66). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவா், வியாழக்கிழமை இவா் மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தாா். ராமசந்திரபுரம் பிரதான சாலையில் வேகமாக வந்த பால் வாகனம், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த மஞ்சுநாத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து எலஹங்கா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT