பெங்களூரு

டி20 கிரிக்கெட் போட்டி: இன்று நள்ளிரவு வரைமெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

DIN


பெங்களூரில் நடக்க இருக்கும் டி20 கிரிக்கெட் போட்டிகளின் போது, மெட்ரோ ரயில்சேவையை நள்ளிரவு 12.30 மணி வரை நீட்டிக்க பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மெட்ரோ ரயில்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டுத் திடலில் செப். 22-ஆம் தேதி டி20 கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த போட்டிகளின் போது, மைசூரு சாலை முதல் பையப்பனஹள்ளி வரையிலான மெட்ரோ ரயில்சேவையை நள்ளிரவு 12.30 மணி வரை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில், 20 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். இரவு 10 மணிக்கு மேல் டோக்கன்களுக்கு பதிலாக காகிதத்தில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டு விநியோகிக்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.50 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

SCROLL FOR NEXT