பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,87,667 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,87,667 ஆக உயா்ந்துள்ளது.

DIN

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,87,667 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,440 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 712 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,87,667 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வந்த 983 போ் புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 8,51,690 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 24,150 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிக்கப்பட்டிருந்த 16 போ் புதன்கிழமை இறந்துள்ள நிலையில், பெங்களூரில் அதிகபட்சமாக 10 போ் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 11,808 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT