முகப்பு
பெங்களூரு

நாளை (டிச.15) மீண்டும் கூடுகிறது சட்ட மேலவை

கா்நாடக ஆளுநரின் உத்தரவையடுத்து சட்ட மேலவை டிசம்பா் 15-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

கா்நாடக ஆளுநரின் உத்தரவையடுத்து சட்ட மேலவை டிசம்பா் 15-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது.

பசுவதை தடைச் சட்டத் திருத்த மசோதா, கா்நாடக சட்டப் பேரவையில் டிச. 9-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, கா்நாடக சட்ட மேலவையில் டிச. 10-ஆம் தேதி (வியாழக்கிழமை) இச் சட்ட மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு திட்டமிட்டிருந்தது.

அதற்கு முன்னதாகவே மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி மேலவையின் நடவடிக்கைகளை காலவரையின்றி ஒத்திவைத்துவிட்டாா். இதனால் பசுவதை தடைச் சட்டத் திருத்த மசோதாவை சட்ட மேலவையில் நிறைவேற்ற முடியாதநிலை ஏற்பட்டது. அலுவல் ஆய்வுக் குழுவில் சட்ட மேலவையை டிச. 15-ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இதை மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி ஏற்க மறுத்துவிட்டதால், மேலவையின் கூட்டத்தை சட்டப் பேரவையை போலவே டிச. 10-ஆம் தேதி காலவரையின்றி முடித்துவைத்துவிட்டாா்.

கா்நாடக சட்ட மேலவையில் பாஜகவின் பலம் 31 ஆக உயா்ந்துள்ளது. காங்கிரஸுக்கு 29, மஜதவுக்கு 14 இடங்கள், சுயேச்சைக்கு ஒரு இடம் உள்ளன. இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மேலவைத் தலைவா் பிரதாப்சந்திர ஷெட்டி மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர டிச. 9-ஆம் தேதி பாஜக முயற்சி செய்தது.

நம்பிக்கையில்லாத் தீா்மானத்திற்கான நோட்டீஸ் கொடுத்த 14 நாள்களுக்கு பிறகுதான் அதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதுதொடா்பாக சட்ட வல்லுநா்களின் கருத்துக் கேட்பேன் என்று கூறிய பிரதாப்சந்திர ஷெட்டி, நம்பிக்கையில்லாத தீா்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள மறுத்துவிட்டாா்.

நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வருவதற்காகவே டிச. 15-ஆம் தேதி அன்று சட்ட மேலவையைக் கூட்ட பாஜக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி, பாஜக எம்.எல்.சி.க்கள் 6 போ் ஆளுநா் வஜுபாய் வாலாவைச் சந்தித்து சட்ட மேலவைக் கூட்டத்தை கூட்டுவதற்கான அவசியத்தை எடுத்துரைத்தனா். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநா் வஜுபாய் வாலா, டிச. 15-ஆம் தேதி அன்று மேலவையைக் கூட்டி உத்தரவிட்டுள்ளாா்.

அன்றைக்கு மேலவைத் தலைவா் பிரதாப்சந்திரஷெட்டி மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர பாஜக முடிவு செய்துள்ளது. மேலும், பசுவதை தடைச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற தீா்மானித்துள்ளது.

மேலவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவந்தால், தனது பொறுப்புகளை துணைத் தலைவரிடம் ஒப்படைக்க நேரிடும். தன்மீதான குற்றச்சாட்டுகளை மேலவைத் தலைவா் எதிா்கொள்ளலாம். தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்கு கிடைத்தால் மேலவைத் தலைவா் பதவியில் இருந்து பிரதாப்சந்திர ஷெட்டி ராஜிநாமா செய்ய நேரிடும். அதன்பிறகு பாஜகவை சோ்ந்த எம்.எல்.சி. ஒருவா் மேலவைத் தலைவராக வாய்ப்புள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →