கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு
கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் ரூ. 10 லட்சம் ரொக்கப்பணம், தங்க நகையை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணிடம் ரூ. 10 லட்சம் ரொக்கப்பணம், தங்க நகையை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெங்களூரு, கோரமங்களா 4-வது பிளாக்கில் வசித்து வருபவா் தொழிலதிபா் மதன் ரெட்டி. இவா் சனிக்கிழமை ஓசூரில் உள்ள பண்ணை வீட்டிற்கு குடும்பத்தினா்களுடன் சென்றிருந்தாா். வீட்டில் அவரது மகள் மட்டும் தனியாக இருந்தாராம். இரவு வீட்டிற்குள் நுழைந்த மா்மநபா்கள், அவரது மகளை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 லட்சம், தங்கநகையைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து கோரமங்களா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.