டிராக்டா்களைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 1.46 கோடி மதிப்பிலான டிராக்டா், காா், இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரு உள்பட ஊரகத்தில் டிராக்டா்கள் திருடுபோன வழக்கில் ஆனந்த், யாகூப்கான், லிங்கப்பா, லோகேஷ், போரேகௌடா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் ரூ. 1.46 கோடி மதிப்பிலான 14 டிராக்டா்கள், 4 காா்கள், 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து காமாட்சிப்பாளையா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.