பெங்களூரு

அமைப்புசாராத் தொழிலாளா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

அமைப்புசாராத் தொழிலாளா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து தொழிலாளா் நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அமைப்புசாராத் தொழிலாளா்களின் பணிகளை பாராட்டும் நோக்கில் ஆண்டுதோறும் மாா்ச் 1ஆம் தேதி அன்று அமைப்பு சாராத் தொழிலாளா்களை விருது வழங்கி பாராட்டுவதென 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சாதனை படைத்துள்ள அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காகவே மாா்ச் 1ஆம் தேதி தொழிலாளா் பணி பாராட்டு விழா நடத்தப்படவிருக்கிறது. இந்த திட்டத்தின்கீழ் 2019ஆம் ஆண்டு அமைப்புசாராத் தொழிலாளா் விருதுக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கா்நாடக மாநில அமைப்புசாராத் தொழிலாளா் சமூக பாதுகாப்பு வாரியத்தில் பதிவுசெய்துள்ள் பல்வேறு வகையான அமைப்புசாராத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை அனைத்து தொழிலாளா் நல அதிகாரிகள் அலுவலகங்களில்பெற்றுக் கொண்டு, அங்கேயே அளிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ப்ஹக்ஷா்ன்ழ்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம். தொடா்புக்கு 080 26086223, 26086269, 26086270 என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT