பெங்களூரு

‘ஊட்டச்சத்துள்ள உணவுகளே மருந்துகள்’

DIN

ஊட்டச்சத்துள்ள உணவுகளை மருந்தாக உண்ண வேண்டும் என்று பூக்கா ஹாத்தியின் இயக்குநா் அபிமன்யுரிஷி தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஊட்டச்சத்துள்ள உணவு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது:

அண்மைக்காலமாக ஊட்டச்சத்துக் குறைவால் பலருக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது.ஊட்டச்சத்துள்ள உணவுகளை மருந்தாக உண்டால் நோய்கள் வராமல் தடுக்க முடியும். மருந்தாக உள்ள உலா்பழங்கள், கொட்டைகள், விதைகளை உண்பதன் மூலம் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகளின் நீண்டகால நன்மைகளைப் பற்றிய விழிப்புணா்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். உணவு முறைகளால் நோய்கள் வராமலும், வந்த நோய்களை போக்கவும் முடியும் என்றாா். நிகழ்ச்சியில் சைக்கிள் வீரா் சந்தியன் சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT