பெங்களூரில் மே 24, 31-ஆம் தேதிகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின் பேரில் பெங்களூரில் மே 31- ஆம் தேதி வரை 4 ஆம் கட்டமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 24, 31) பொது முடக்க உத்தரவு பெங்களூரில் முழுமையாக அமல்படுத்தப்படும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். காய், கனிகள், முட்டை, இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வாங்கிச் செல்ல அனுமதிக்கப்படும். தேவையில்லாமல் யாரேனும் வாகனங்களில் சென்றால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.