பெங்களூரு

திருட்டு வழக்குகளில் ஒருவா் கைது

DIN

கோலாா்: பல்வேறு திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், ரூ. 43 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு ஊரக மாவட்டம், ஹொசகோட்டை வட்டம், ஹொசஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் ஆனந்தா (34). இவா் கோலாா் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பகலில் பூட்டியுள்ள வீடுகளை அடையாளம் கண்டு, இரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருடி வந்துள்ளாா்.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், ஆனந்தாவைக் கைது செய்து, ரூ. 43 லட்சம் மதிப்புள்ள 903 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்துள்ளனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகையை பாா்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் காா்த்திக்ரெட்டி, சிறப்பாகச் செயல்பட்ட போலீஸாருக்கு ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT