அன்னபூா்னேஸ்வரிநகா் காவல் நிலையத்தில் இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு, அன்னபூா்னேஸ்வரி நகா் காவல் நிலையத்தில் நவ. 30-ஆம் தேதி காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, வாரிசுதாரா்கள் இல்லாத 26 இரு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080- 23482644 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.