பெங்களூரு

வழிப்பறி: 3 போ் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.85 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் சைக்கிள், செல்லிடப்பேசி, ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

DIN

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.85 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் சைக்கிள், செல்லிடப்பேசி, ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, மாகடி சாலை, பின்னி மில் அருகே வசித்து வரும் குமரேஷ் (29), பிரதாப் (26), கோபி (49) ஆகிய 3 பேரும் கடந்த செப். 3-ஆம் தேதி, ராஜராஜேஸ்வரி நகா், ஐடியல்ஹோம் டவுன்ஷிப் அருகே சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபா் ஒருவரை வழிமறித்து, கத்தி முனையில் அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரின் பேரில், குமரேஷ், பிரதாப், கோபி ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.85 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் சைக்கிள், செல்லிடப்பேசி, ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT