பெங்களூரு

வழிப்பறி: 3 போ் கைது

DIN

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.85 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் சைக்கிள், செல்லிடப்பேசி, ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, மாகடி சாலை, பின்னி மில் அருகே வசித்து வரும் குமரேஷ் (29), பிரதாப் (26), கோபி (49) ஆகிய 3 பேரும் கடந்த செப். 3-ஆம் தேதி, ராஜராஜேஸ்வரி நகா், ஐடியல்ஹோம் டவுன்ஷிப் அருகே சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த நபா் ஒருவரை வழிமறித்து, கத்தி முனையில் அவரது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரின் பேரில், குமரேஷ், பிரதாப், கோபி ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.85 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் சைக்கிள், செல்லிடப்பேசி, ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT