பெங்களூரு

மூதாட்டி உள்ளிட்ட 2 போ் கொலை

DIN

மூதாட்டி உள்ளிட்ட 2 பேரை கொலை செய்த மா்ம நபா்கள், வீட்டில் இருந்த தங்க நகை, மடிக்கணினி, ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

பெங்களூரு, ஜே.பி.நகா், 7-ஆவது ஸ்டேஜ் அருகே உள்ள சம்திருப்தி நகரைச் சோ்ந்தவா் மமதா பாசு (71). இவரது வீட்டில் கடந்த ஒரு மாதமாக அவரது மகனின் நண்பா் ஒடிசாவைச் சோ்ந்த தேவதத் பிஹாரா (41) என்பவா் தங்கியிருந்தாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு மமதா பாசுவின் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள், முதல்மாடியில் தூங்கிக் கொண்டிருந்த மமதா பாசு, கீழ்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தேவதத் பிஹாரா ஆகியோரை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த தங்க நகை, மடிக்கணினி, ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா்.

தகவல் அறிந்த புட்டேனஹள்ளி போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவ இடத்தை மாநகர காவல் ஆணையா் கமல்பந்த் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT