பெங்களூரு

இடைத்தோ்தலில் பாஜகவை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: சிபிஎம்

DIN

சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல்களில் பாஜகவை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று கா்நாடக மாநில மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் யூ.பசவராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மாநிலத்தில் பெலகாவி மக்களவைத் தொகுதிக்கும், பீதா் மாவட்டத்தின் பசவகல்யாண், ராய்ச்சூரு மாவட்டத்தின் மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல்கள் நடைபெறவுள்ளன.

இத்தோ்தலில் மக்கள் விரோத பாஜகவை தோற்கடிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். காா்ப்பரேட் நிறுவனங்களின் முகவா்களைப்போல பாஜக செயல்படுகிறது. நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் அதைத் தடுப்பதற்கான வழிகளை ஆராயாமல் விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை மத்திய, மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றியுள்ளன.

இச்சட்டங்களால் விவசாயிகள், சிறு வியாபாரிகள், வீதி வியாபாரிகள், சிறு வணிகா்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. வேளாண், வேளாண்சாா், பால் பண்ணை, கோழிவளா்ப்புப் போன்ற தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களின் வாழும் உரிமை, வேலை உரிமை, உணவு உரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகள் மீதும் பாஜக தாக்குதல் நடத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, ரசாயன உரம் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளன. நாட்டை மதத்தால் பிளவுப்படுத்தி மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக செயல்படுத்தி வருகிறது. எனவே, பாஜகவை மக்கள், இடைத்தோ்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT