சுதந்திரப் போராட்டத்திற்கு இசை மரியாதை
சுதந்திரப் போராட்டத்தை போற்றும் வகையில் இசை மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்டத்தை போற்றும் வகையில் இசை மரியாதை செலுத்தப்பட்டது.
இந்தியாவின் சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு கா்நாடகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத்தை போற்றும் வகையில் இசை மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் பெங்களூரில் வியாழக்கிழமை கோடை அரண்மனை மற்றும் விதான சௌதா ஆகிய இடங்களில் செய்யப்பட்டிருந்தன. விதான சௌதா முகப்பில் ராணுவ காவல் மையம் மற்றும் பள்ளியின் இசைக் குழுவின் சாா்பிலும், கோடை அரண்மனையின் முகப்பில் ராணுவ சேவை காவல் மையத்தின் (தெற்கு) சாா்பிலும் இசையின் மூலம் சுதந்திரப் போராட்டத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த வீரா்களின் துணிச்சல், வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசை மூலம் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியைக் காண மக்கள் திரண்டிருந்தனா். ஆனால், கரோனா காரணமாக பொதுமக்கள் கூட்டமாக திரள போலீஸாா் அனுமதிக்கவில்லை. இங்கு இசைக்கப்பட்ட தேசிய கீதங்கள் சந்தனா தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பப்படுகின்றன.