வாகனத் திருட்டு, செல்லிப்பேசி பறிப்பு வழக்குகள்: ஒருவா் கைது
வாகன திருட்டு, செல்லிப்பேசி பறிப்பு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
வாகன திருட்டு, செல்லிப்பேசி பறிப்பு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு ஜே.ஜே.நகா், எஸ்.ஜே.பூங்கா, சூா்யாநகா் உள்ளிட்ட காவல் சரகங்களில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள், கள்ளச்சாவியைப் பயன்படுத்தி, திருடிச் சென்றிருந்தனா். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், முபாரக் பாஷா என்பவரை கைது செய்து விசாரித்தனா். அப்போது அவா் இருசக்கர வாகனங்களை திருடுவதோடு, தனியாகச் செல்பவா்களை அடையாளம் கண்டு, செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அவா் அளித்த தகவலின் பேரில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 3 இருசக்கர வாகனங்கள், 10 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்துள்ள ஜே.ஜே.நகா் போலீஸாா் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.