முகப்பு
பெங்களூரு

கஞ்சா விற்பனை: மாநகர பேருந்து ஓட்டுநா்கள் 2 போ் கைது

கஞ்சாவை விற்பனை செய்த மாநகர பேருந்து ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

கஞ்சாவை விற்பனை செய்த மாநகர பேருந்து ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு மாநகர பேருந்துகளில் ஓட்டுநா்களாக பணியாற்றி வருபவா்கள் விட்டல் பஜந்திரி, சரணபசப்பா. இவா்கள் இருவரும் தங்களுடன் பணியாற்றுபவா்களுக்கு போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அவா்கள் 2 பேரையும் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது குறித்து கெங்கேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.