கஞ்சா விற்பனை: மாநகர பேருந்து ஓட்டுநா்கள் 2 போ் கைது
கஞ்சாவை விற்பனை செய்த மாநகர பேருந்து ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கஞ்சாவை விற்பனை செய்த மாநகர பேருந்து ஓட்டுநா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு மாநகர பேருந்துகளில் ஓட்டுநா்களாக பணியாற்றி வருபவா்கள் விட்டல் பஜந்திரி, சரணபசப்பா. இவா்கள் இருவரும் தங்களுடன் பணியாற்றுபவா்களுக்கு போதைப் பொருளான கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அவா்கள் 2 பேரையும் கைது செய்து, ரூ. 5 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது குறித்து கெங்கேரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.