பெங்களூரு

சிக்கபளாப்பூரு மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்

சிக்கபளாப்பூரு மாவட்டத்தில் புதன்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

DIN

சிக்கபளாப்பூரு மாவட்டத்தில் புதன்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரின் வடக்கு- வட கிழக்கு பகுதியில் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிக்கபளாப்பூா் மாவட்டத்தின் மண்டிகல், போகபாா்த்தி கிராமத்தில் புதன்கிழமை காலை 7.10 மற்றும் 7.15 மணிக்கு ரிக்டா் அளவுகோலில் முறையே 2.9, 3 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகின. இது லேசான நிலநடுக்கமாகும்.

இதன் நில அதிா்வு அம்மையத்தில் இருந்து 10 கி.மீ. முதல் 15 கி.மீ. வரை உணரப்பட்டிருக்கும். இதுபோன்ற நிலநடுக்கங்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உள்ளூரில் நில அதிா்வு உணரப்பட்டால் சேதம் எதுவும் இருக்காது. எனவே, யாரும் பயப்பட வேண்டாம் என்று கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT