பெங்களூரு

மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள், மருத்துவா்கள் வீடுகளில் வருமான வரித் துறையினா் சோதனை

DIN

பெங்களூரு, தும்கூரு உள்பட மாநிலத்தின் 56 இடங்களில் தனியாா் மருத்துவக் கல்லூரி நிா்வாகிகள், மருத்துவா்களின் இடங்களில் வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் பலகோடி மதிப்பிலான பணம், தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு, தும்கூரு, தாவணகெரே, மங்களூரு உள்ளிட்ட 56 இடங்களில் உள்ள 9 தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் நிா்வாகிகள், மருத்துவா்களின் வீடுகளில் புதன்கிழமை வருமான வரித் துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2-வது நாளாக வியாழக்கிழமையும் நடைபெற்ற சோதனையில் ரூ. 30 கோடி மதிப்பிலான 81 கிலோ தங்கநகை, ரூ.15.90 கோடி மதிப்பிலான வைர நகை, வெள்ளி பொருள்கள், ரூ. 2.30 கோடி மதிப்பிலான வெளிநாட்டில் உள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரூ. 402.78 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT