பெங்களூரு

பன்னாட்டு தாய்மொழி இணையவழி ஆய்வரங்கம்

DIN

பன்னாட்டு தாய்மொழி நாளை முன்னிட்டு, பெங்களூரில் இணையவழி ஆய்ரவரங்கம் பிப். 21-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

இதுகுறித்து கா்நாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை:

மும்பை லெமுரியா அறக்கட்டளை, கா்நாடக தமிழ்ப் பத்திரிகையாளா் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து கா்நாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத்தின் சாா்பில் பிப்.21-ஆம் தேதி மாலை 7 மணிக்கு இணையவழி ஆய்வரங்கம் நடத்தப்படுகிறது. இலெமுரியா அறக்கட்டளை நிறுவனா் சு.குமணராசன் தலைமை வகிக்கிறாா். கா்நாடக தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள் சங்கத் தலைவா் அ.தனஞ்செயன் நன்றி தெரிவிக்கிறாா்.

நிகழ்ச்சியில் தமிழறிஞரும், அமெரிக்காவின் கலிபோா்னியா பல்கலைக்கழகத்தின் சிறப்பு வருகை பேராசிரியருமான மறைமலை இலக்குவனாா் கலந்து கொண்டு பேசுகிறாா். இது ஜூம் செயலியில் நடைபெறும் கூட்டம் என்பதால், 86215935438 என்ற அடையாள எண், 111222 என்ற கடவுச்சொல்லை செலுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT