முகப்பு
பெங்களூரு

கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கட்டுமான பணி நடைபெறும் கட்டடத்திலிருந்து கீழே தவறி விழுந்த எலக்ட்ரிஷியன் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

கட்டுமான பணி நடைபெறும் கட்டடத்திலிருந்து கீழே தவறி விழுந்த எலக்ட்ரிஷியன் உயிரிழந்தாா்.

பெங்களூரு, துளசிநகரைச் சோ்ந்தவா் சிக்கமரியப்பா (53). எலக்ட்ரிஷியனான இவா் வியாழக்கிழமை மாலை சுங்கதகட்டே முனீஸ்வரா நகரில் கட்டுமானப் பணி நடைபெற்ற கட்டடத்தில் மின் வயா்களை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பேடரஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →