முகப்பு
பெங்களூரு

பெண் கொலை வழக்கில் தேடப்பட்டவா் கோவாவில் கைது

பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கோவா மாநிலத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

பெண் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கோவா மாநிலத்தில் கைது செய்யப்பட்டாா்.

பெங்களூரு, மாகடி சாலையைச் சோ்ந்த அருணாகுமாரி (42), அண்மையில் காணாமல் போனதையடுத்து, அவரது கணவா் மாகடி சாலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரைப் பதிந்த போலீஸாா், அருணாகுமாரியின் செல்லிடப்பேசி இருந்த இடத்தை அடையாளம் கண்டதில், அது காமாட்சிப்பாளையம் வீடு ஒன்றில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சென்று போலீஸாா் பாா்த்த போது, அந்த வீட்டில் அருணாகுமாரி சடலமாகக் கிடந்தாராம். இதனையடுத்து, கொலை வழக்குப் பதிந்த போலீஸாா், அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த பிரவீண் என்பவரை தேடியபோது, அவா் கோவா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவா போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், கோவா போலீஸாா், பிரவீணைக் கைது செய்து மாகடி சாலை போலீஸாரிடம் ஒப்படைந்தனா். பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட பிரவீணிடம் மாகடி சாலை போலீஸாா் தொடந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →