முகப்பு
செய்திகள்

ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல.... மன்னிப்புக் கேட்ட பார்த்திபன்!

ஜாதி குறித்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மன்னிப்புக் கேட்டு பதிவிட்டுள்ளார்.

Updated On : 18 மார்ச், 2026 at 6:02 AM
பார்த்திபன்
பகிர்:

ஜாதி குறித்த சர்ச்சை பேச்சுக்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மன்னிப்புக் கேட்டு பதிவிட்டுள்ளார்.

நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு மொழிப்படம் உஸ்தாத் பகத் சிங். இந்தப் படத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் தனனுடைய ஜாதியை வெளிப்படையாக கூறிய விடியோ, சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளானது.

இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், ”சத்தியமாக சொல்கிறேன், எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.

அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி…. இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன்.

அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை.

என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறைகூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன்.

தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Director and actor Parthiban has posted an apology for his controversial comment on caste.

முழு கட்டுரையைப் படிக்க →